search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் வீடு வழங்கும் திட்டம்"

    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
    • உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்ற 70 - க்கும் மேற்பட்ட பயனாளிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், மாவட்ட திட்ட இயக்குனர் ( ஊராட்சி ) லோகநாயகி வீடு ஒதிக்கீடு பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் .

    இதில் கலந்து கொண்ட பயனாளிகளி டம் வீடுகட்டாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்து , ஆலோசனை வழங்கி விரைவாக வீடு கட்டி முடிக்க வேண் டும் என அறிவுறுத்தினார் . நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் , நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேத முத்து , சிவராமன் , பணி மேற்பார்வையாளர் விஜயகுமார் , துணை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    ×